articles

img

இது சட்டமில்லை; சட்டாம்பிள்ளைத்தனம் மேடம்! - க.கனகராஜ்

மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வணக்கம்.

புயலால்-வெள்ளத்தால்-கடும் மழையால் பாதிக்கப்பட்டு புரட்டிப் போடப்பட்டிருக்கும் தமிழ் நாட்டிற்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருக்கிறீர்கள்.

சட்டம் அப்படி மட்டுமே சொல்லவில்லை. மாறாக, இந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் எழுப்பிய கேள்வி க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கீழ்க்கண்டவாறுசொல்கிறது.

“மாநில பேரிடர் எதிர்கொள்ளல் விதி மற்றும் தேசிய பேரிடர் எதிர்கொள்ளல் விதி வரையறைகளின் படி  மாநிலத்திற்கு சிறப்பு உதவிகள் செய்வதற்கு இடமில்லை. ஆனால், நிலைமையின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களு க்கு உரித்தான பேரிடர் நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்கலாம். மேலும், கடும் பாதிப்பை ஏற்படுத்திய பேரிடருக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் போதுமான நிதியில்லாத போது ஒன்றிய அரசாங்கம் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலி ருந்து ஒன்றிய அமைச்சகங்களின் கூட்டுக்குழுவின் பரிந்துரைகளுக்கு காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க பணம் ஒதுக்கீடு செய்யலாம்”.

இந்த விதி விலக்கு தமிழ்நாட்டிற்குப் பொருந்தா தா? தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாதா?

2021-ஆம் ஆண்டு மே மாதம் குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது விமானத்தில் பறந்து பிரதமர் பார்வை யிட்ட பிறகு உடனடி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.1,000 கோடியும் கூடுதலாக இறந்தோருக்கு ரூ.2 லட்சமும் காய மடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கியது சட்டத் தில் இருக்கிறதா? மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டதா?.

அதே 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்கத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது இறந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கியது சட்டத்தில் இருக்கிறதா? மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டதா?.

இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சட்டத்திலும் இடமிருக்கிறது. சட்டத்தைத் தாண்டி பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், குஜ ராத்தின் கண்ணில்  வெண்ணெய்யும் தமிழ்நாட்டின் கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதற்கும் இடையே தமிழ்நாட்டு மக்கள் மீதான உங்களின் வன்மமும் அர சியல் பழிவாங்கல் நடவடிக்கையுமே குறுக்கே நிற்கிறது.

முன்னெச்சரிக்கை பற்றி பின் சிந்தனை
கனமழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததாகவும், ஆனால், மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் பேரழிவு ஏற்பட்ட தாகவும் தாங்கள் போகிற இடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். டிசம்பர் 12-ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் 124 மில்லி மீட்டர் வரை மழை  பெய்யுமென்று  எச்சரித்ததாகவும் அதற்கு மாநில அரசு தயார் நிலையில் இல்லையென்றும் குற்றம்சாட்டி யிருக்கிறீர்கள்.

முதலாவதாக, வானிலை ஆய்வு மையம் 21 செ.மீட்ட ருக்கும் அதிகமாக பெய்ததால் அதிக கனமழை என வரையறை செய்துள்ளது. 124 மில்லி மீட்டர் என்று சொன்னதை 124 செ.மீ,. எனத் திரித்து உள்நோக்கத் துடன் மீண்டும்... மீண்டும்... இதை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்.

இந்தியாவின் வரலாற்றில் ஒரே நாளில் 96 செ.மீ., மழை பெய்த வரலாறு எங்கேனும் உண்டா?  இன்னும் சொல்லப் போனால், அதை முன்கூட்டி கணிப்பதற்கான கருவிகள் நம்மிடம் உண்டா? இதற்கு வேறு யாரும் பதில் சொல்வதை விட 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒன்றிய அரசின் புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் சொல்வதை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

“கடந்த வாரம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் பெய்தது போன்று 90  செ.மீ., மழை பொழிவை முன்னறிவிப்பு செய்யும் வானி லை முன்னறிவிப்பு மாதிரிகள் எதுவும் இல்லை. இத்தகைய நோக்கத்திற்காக வரும் 2024-ஆம் ஆண்டில் இரண்டு உயர்தர செயல்பாட்டு கணினி களை வாங்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்”. இந்தத் தகவலை மின்ட் ஆங்கிலப் பத்திரிகை டிசம்பர் 27-ஆம் தேதி பதிவுசெய்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க ‘இவ்வளவு முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பிறகும்’ தென்னக ரயில்வே 96 செ.மீ.,  மழை பொழிவு இருந்த காயல்பட்டினம் நகரத்தின் வழியாகச் செல்லும் சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்துச் செய்யாமல் இயக்கி 800 பயணிகளை மரணத்தின் விளிம்பிற்கு  கொண்டு சென்றதேன். இதற்கு யார் பொறுப்பேற் பது? ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சரவையுமா? பிரதமரா? தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கிடையாது என்று  சொல்வதற்காக தொடர்ச்சியாக வந்து சென்று கொண்டிருக்கும் நீங்களா? அல்லது ரயில்வே துறை அமைச்சரா?

இந்தாண்டு ஜூலை மாதம் உள்துறை அமைச்ச கம் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், தென்மேற்குப் பருவமழையின் காரணமாக நாடு முழுவதும் மொத்த மாக இறந்தவர்களின் எண்ணிக்கை 624 என்றும், இதில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதி அதாவது 103  பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லி யிருக்கிறது. அது ஒன்றும் சென்னையோ, தென் மாவட்டங்களோ சந்தித்தது போன்று திடீர் மழைப் பொழிவல்ல. தென்மேற்குப் பருவ மழை தான். இதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தி ருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது. இது ‘‘ஊருக்கு உபதேசம். உனக்கும் எனக்கும் இல்லை’’ என்ற நிலைப்பாட்டைத் தவிர வேறென்ன?.

உதவியா? வியாபாரமா?
நாங்கள் அதாவது, (ஒன்றிய அரசாங்கம்) இராணு வத்தைக் கொடுத்தோம். விமானத்தைக் கொடுத் தோம். ஹெலிகாப்டர் கொடுத்தோம். கப்பல் கொடுத் தோம் என்றெல்லாம் உதவிப் பட்டியலில் அதை சேர்த்திருக்கிறீர்கள். யாரோ ஒரு நபர் கூட உதவி என்று சொன்னால் அதை திரும்ப வாங்க மாட்டார். ஆனால், இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆண்டு  தோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் உதவியோடு கட்டமைக்கப்பட்டுள்ள நமது இராணுவம் ஆபத்து காலத்தில் உதவ வருகிறபோது அதற்கு அணா-பைசா பாக்கியில்லாமல் வசூலித்துவிடும் கொடுமை யை செய்து கொண்டேயிருக்கிறீர்கள்.

மலையாளத்தில் “2018” என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது. அந்தத் திரைப்படம் 2018 வெள்ள பாதிப்பை முழுமையாக சொல்லிவிடவில்லை என்று  சொல்வோர் உண்டு. அந்த மாநிலத்தில் கடலோரத்தி லிருந்த மீனவர்கள் தங்கள் மக்களைப் பாதுகாப்ப தற்காக கிடைத்த வாகனங்களில் தங்கள் படகுகளை  ஏற்றிக்கொண்டு பல ஆயிரக்கணக்கான மக்களை மர ணத்திலிருந்து மீட்டெடுத்தார்கள். இது இயல்பான மனித குணம்.

அந்த நேரத்தில் ஒன்றிய அரசாங்கம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரேஷன் மூலம் வழங்க அரிசி கொடுத்தது. ஒரு அரிசி மணியைக் கூட விட்டு வைக்கா மல் விலை நிர்ணயித்து ரூ.205 கோடியை பிடுங்கிக் கொண்டீர்கள். மாநில அரசாங்கம் தரவில்லை யென்றால் ஒன்றிய அரசாங்கம் தர வேண்டிய நிதியில் பிடித்துக்கொள்வோம் என மிரட்டினீர்கள். இது தவிர மீட்புப்படை வீரர்களையும் சாதனங்களையும் ஏற்றி வந்த ஹெலிகாப்டர்களுக்கு ரூ.33 ஆயிரம் கோடி கப்பம் கட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்தீர்கள். வேறு வழியின்றி அந்த மாநில அரசு அதையும் கொடுத்துவிட்டது.

ஒரு கந்துவட்டிக்காரனிடம் எங்காவது மிஞ்சியிருக் கும் ஒரு எள் முனையளவு ஈரத்தைக் கூட உங்களது செயலில் பார்க்கமுடியவில்லை. இந்தாண்டு ஜூலை  மாதம் 11-ஆம் தேதி பேரிடர் மேலாண்மைத் துறை  இயக்குநர் அனைத்து மாநில தலைமைச் செய லாளர்களுக்கும் அனுப்பியுள்ள ஆணையில், பிரிவு  (3-பி) அத்தியாவசியப் பொருட்களை வான் வழியாக கொடுப்பதற்கும், விமானப்படை மீட்பு நடவடிக்கை களுக்காகவும் ஆகும் செலவு பற்றிக் குறிப்பிடும்போது  அந்தச் செலவுகள் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்கும் தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளீர்கள். உண்மையில் இது உதவி என்பதை விட ஒரு வியா பாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.a

நேரடி பணப் பறிப்பு
ஆறாயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப் பதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தாதது பற்றிக் குறிப்பிட்டு மிகவும் கோபத்தோடு இது யார்  வீட்டு அப்பன் பணமும் இல்லையே என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினால் தவறே ஏற்படாது என்ற  தோற்றத்தையும் கையில் கொடுத்தால் அத்தனையும் களவாடப்பட்டு விடும் என்கிற தொனியிலும் இதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் மூலம்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது தான். அதில் நடந்த முறைகேடு ரூ.4,000 கோடி. (உத்தரப்பிரதேசத்  தில் 21 லட்சம், அசாமில் 8.35 லட்சம், கர்நாடகத்தில் 4 லட்சம் பேர்) முறைகேடு நடைபெற்ற மாநிலங் களில் பாஜக தான் ஆட்சிப் பொறுப்பிலிருந்தது. இந்த முறைகேட்டிற்கு யார் பொறுப்பேற்பது? நிதியமைச்சர் என்கிற முறையில் நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? ஆயுஷ்மான் பாரத் ‘பயனாளிகளுக்கு’  ஒரே அலை பேசி கணக்கில் 7.50 லட்சம் பேருக்கு கொடுத்தது மெகா மோசடி இல்லையா? அதற்கு நீங்கள் பொறுப்பேற் கிறீர்களா?.

வங்கியில் பணம் செலுத்தினால் அதற்கு வட்டி கொடுக்கிற வழக்கம் இருந்தது. ஆனால், ஏழை- எளிய மக்களுக்கு அதை இல்லாமல் செய்வதற் காக போதுமான இருப்பு இல்லை எனக் காட்டி பணத்தை பிடித்துக்கொள்கிற வங்கிப் பறிமுறையை அமல்படுத்தியது தங்கள் அரசாங்கம் தான். ஏழை கள் தான் பத்தாயிரத்திற்கு கீழோ, ஐயாயிரத்திற்கு கீழோ பணம் வைத்திருப்பார்கள். பெரும் பணக்காரர் தான் அதிகப் பற்று வாங்கிக் கொள்வார்கள். ஒரு ஏழை யின் கணக்கில் ரூ.5,000 இல்லையென்று கூறி ரூ.200,  ரூ.300  என பிடிப்பது வழிப்பறியைவிட மோசமானது இல்லையா?.

என் பணம் வங்கியில் இருக்கிறது. ஏடிஎம்மில் இருந்து இத்தனை முறைக்கு மேல் பணம் எடுத்தால் இவ்வளவு தண்டம் கட்டு எனச் சொல்வது என்ன வகை நியாயம். உன் கணக்கு குறித்து எஸ்எம்எஸ் அனுப்பினேன். காசு கொடு என அதற்கு மட்டும் ரூ.6,000 கோடி அபகரித்திருக்கிறீர்கள். ஏடிஎம்மில் கூடுதல் முறை பணம் எடுத்ததாகச் சொல்லி ரூ,8,000 கோடி பறித்திருக்கிறீர்கள். குறைந்த அளவு பணம் இருந்ததாகச் சொல்லி ரூ.21 ஆயிரம் கோடி ஏழையின் பாக்கெட்டிலிருந்து பிடுங்கியிருக்கிறீர்கள். உங்களை நம்பி வங்கியில் பணம் போட்டால் மேற்கண்ட மூன்றிலும் சேர்த்துப் பிடுங்கிய ரூ.35 ஆயிரம் கோடி இன்னும் சில பத்தாயிரம் கோடி ரூபாய்களாக அதிகரிக்கும் என்ற உள்நோக்கத்துடன் தான் இதை சொல்லியிருக்கிறீர்கள்.

நானும் தர மாட்டேன்...வாங்கவும் விட மாட்டேன்
 2018-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை வெள்ளம் புரட்டிப் போட்டது. இந்தியா முழுவதுமிருந்து சாதாரண மக்கள் அந்த மாநில அரசுக்கு நிதியனுப்பினார்கள். சமைக்க வைத்திருந்த பொருட்களையும் கூட வீடற்று,  உடைமைகள் இழந்து மழையிலும் குளிரிலும் வாடிய மக்களுக்கு ஏழை இந்தியர்கள் அனுப்பிவைத்தார்கள். அப்போது, ஐக்கிய அரபு அமீரகம் இந்த நிலைமை களை யெல்லாம் பார்த்த பிறகு ரூ.700 கோடி உதவி செய்ய முன்வந்தது. அப்போதும், நீங்கள் அந்த மாநிலத்திற்கு எந்த நிதியும் கொடுத்திருக்கவில்லை. ஆனால், அமீரகத்தின் நிதியை கேரள அரசாங்கம் வாங்க அனுமதியில்லை என மறுத்துவிட்டீர்கள்.

அதற்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் அந்நிய நாட்டிலிருந்து நன்கொடை பெற தடையிருந்ததை நீக்கி  அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறலாம் என சட்டத்தையே மாற்றினீர்கள். அதாவது, ஒரு கட்சி தனக்கு வரும் பணத்தை எவ்வளவு மோசமான வழிகளி லும் செலவிடலாம். அதற்கு சட்டத்தை திருத்திக் கொள்வீர்கள். ஆனால், ஒரு மாநிலமே பேரிடரில் சிக்கி  திணறிக்கொண்டிருந்தபோது ஒரு நாடு உதவி செய்ய வந்தால் அதை அனுமதிக்க முடியாது என்று  தடை விதித்தீர்கள். இதன் பொருள் என்ன? நானும்  உதவ மாட்டேன். உதவ முன்வந்தாலும் எவரையும் அனுமதிக்க மாட்டேன் என்பதுதானே.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் ஒரு முறை கூட ஒரு வார்த்தை கூட தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசியதே கிடையாது.

இறுதியாக ஒன்று. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000-த்தில் ரூ.5,000-க்கு மேல் ஒன்றிய அரசின் நிதியால் வந்தது என்று தமிழக பாஜக-வினர் பரப்பிக் கொண்டேயிருக் கிறார்கள். தமிழ்நாடு அரசு இறந்தோருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால், பேரிடர் மேலாண்மை பரிந்துரை ரூ. 4லட்சம் மட்டுமே. ஒரு வீடு முழுவதும் மூழ்கி துணிகள் மொத்தமும் போனால் ரூ.2,500. இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் நீர் தேங்கி மொத்த பாத்திரம் பண்டங்களும் அடித்துச் செல்லப்பட்டால் கூடுதலாக ரூ.2,500. இது தான் நீங்கள் சொல்லியிருக்கும் வரையறை.

ரூ.6,000 என்று எந்த இடத்திலும் நீங்கள் சொல்ல வில்லை. ஆனால் தமிழ்நாடு பாஜகவினர் ரூ.10 ஆயிரம்  கொடு என கோரிக்கை வைக்கிறார்கள். மாநில பேரிடர் நிதியிலிருந்து பணமேயிருந்தாலும் ரூ.10 ஆயிரம் கொடுக்க நீங்கள் அனுமதிப்பதில்லை என்பதை யாவது அவர்களுக்குச் சொல்லுங்கள்.

இதுவரையிலும் தமிழ்நாடு அரசாங்கம் நிவாரண உதவிகளாக ரூ. 3,250 கோடி அளவிற்கு அறிவித்திருக் கிறது. இதில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு அளித்த ரூ.900 கோடியை கழித்து  விட்டால், மீதம் ரூ.2,350 கோடி மாநில அரசாங்கம் தன் கஜானாவிலிருந்து தான் கொடுக்க வேண்டி யிருக்கும். அதிலும் கூட அந்த மொத்தத்தையும் எடுக்க முடியாது என்பதையும் நீங்கள் சொல்வது போன்று கொடுத்தால் துணி வாங்குவதற்குக் கூட அல்ல, துடைப்பம் வாங்குவதற்குத்தான் போதுமானது என்பதை பாஜக-வினருக்கு புரியவையுங்கள். தமிழ கத்திற்கு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் அதை நியாயப்படுத்தி பேசுவது சட்டமல்ல. அப்பட்ட மான சட்டாம்பிள்ளைத் தனம்.

கட்டுரையாளர் : மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

நிர்மலா சீதாராமனுக்குஒரு திறந்த மடல்

இதுவரையிலும் தமிழ்நாடு அரசாங்கம் நிவாரணஉதவிகளாக ரூ. 3,250 கோடி அளவிற்கு அறிவித்திருக்கிறது. 
 

இதில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு அளித்தரூ.900 கோடியை கழித்துவிட்டால், மீதம் ரூ.2,350 கோடி மாநில அரசாங்கம் தன் கஜானாவிலிருந்து தான் கொடுக்க வேண்டியிருக்கும்

 அதிலும் கூட அந்த மொத்தத்தையும் எடுக்கமுடியாது என்பதையும் நீங்கள் சொல்வது போன்று கொடுத்தால் துணி வாங்குவதற்குக் கூட அல்ல, துடைப்பம் வாங்குவதற்குத்தான் போதுமானது என்பதை பாஜகவினருக்கு புரியவையுங்கள்.